We Give Everything First

Sunday, May 17, 2020

இரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்



இரத்த சோகை உள்ளவர்கள் இதை சாப்பிடலாம்



ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும்.

திராட்சைப் பழவகைகளில் உயர்தரமான திராட்சைப் பழங்களைப் பதம் செய்து உலர்த்தி பதப்படுத்துகின்றனர். இதுவே உலர் திராட்சை எனப்படுகிறது. உலர் திராட்சையில் உள்ள சத்துக்களை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்…

திராட்சைப் பழத்தில் உள்ள வைட்டமின் சத்துக்களை விட இதில் ஏராளமான சத்துக்கள் காணப்படுகின்றன. பச்சைத் திராட்சைப் பழத்தை விட 10 மடங்கு அதிக உஷ்ணத்தைக் கொடுக்கும்.

விட்டமின்களும், அமினோ அமிலங்களும் உள்ளன. பொட்டாசியம், மெக்னீசியமும் காணப்படுவதால் அமிலத் தொந்தரவுகள் அதிகம் ஏற்படாது.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கும்போது உலர் திராட்சையை சாப்பிட்டு வந்தால் ரத்தசோகை குணமாகும்.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள் தினசரி இரு வேளைகளில் உலர் திராட்சையை சாப்பிட்டு வர நோய் குணமடையும். உலர் திராட்சைப் பழத்தில் அதிக அளவு சுக்ரோஸ், ப்ரக்டோசும் நிறைந்துள்ளன. 

Source: Internet

No comments:

Post a Comment