We Give Everything First

Thursday, June 4, 2020

வரலாற்றில் இன்று 04062020

ஏ.டி.எம். இயந்திரத்துக்கான காப்புரிமம்
ஏ.டி.எம். இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் 1973-ம் ஆண்டு ஜுன் 4-ந்தேதி பெற்றனர்.


இதே தேதியில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்:-

* 1794 - பிரித்தானியப் படைகள் ஹெயிட்டியில் போட்-ஓ-பிரின்ஸ் துறைமுகத்தைக் கைப்பற்றினர். 

* 1878 - ஓட்டோமான் பேரரசு சைப்பிரசை ஐக்கிய இராச்சியத்துக்கு கொடுத்தது. 

* 1917 - முதலாவது புலிட்சர் பரிசுகள் வழங்கப்பட்டன. 

* 1928 - சீனக் குடியரசின் அரசுத் தலைவர் சாங் சுவோலின் ஜப்பானியக் கையாள் ஒருவனினால் படுகொலை செய்யப்பட்டார். 

* 1939 - 963 யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஐக்கிய அமெரிக்காவினால் திருப்பி அனுப்பப்பட்டது. இந்த அகதிகளில் பெரும்பாலானோர் பின்னர் ஜெர்மனியின் நாசி வதைமுகாமில் சிறைவைக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். 

* 1940 - இரண்டாம் உலகப் போர்: பிரான்சின் டன்கேர்க் என்ற இடத்தில் இருந்த 300,000 பிரித்தானியப் படைகள் முற்றாக விலக்கிக் கொள்ளப்பட்டனர். 

* 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மானியப் படைகள் பாரிஸ் நகரைனுள் நுழைந்தனர். 

* 1943 - ஆர்ஜெண்டினாவில் நிகழ்ந்த ராணுவப் புரட்சியில் ரமோன் கஸ்டீல்லோ பதவியிழந்தார். 

* 1944 - இரண்டாம் உலகப் போர்: ரோம் நகரம் நேச அணிகளிடம் வீழ்ந்தது. 

* 1970 - தொங்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை அடைந்தது.

* 1973 - ஏடிஎம் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை டொன் வெட்சல், டொம் பார்ன்ஸ், ஜோர்ஜ் சாஸ்டெயின் ஆகியோர் பெற்றனர். 

* 1979 - கானாவில் இடம்பெற்ற ராணுவப் புரட்சியில் ஜெனரல் ஆச்சியாம்பொங் பதவியிறக்கப்பட்டு ஜெரி ரோலிங்க்ஸ் ஆட்சிப்பொறுப்பை ஏற்றார். 

* 1987 - பூமாலை நடவடிக்கை: இலங்கையின் ஆளுகைக்குட்பட்ட வான்பரப்பில் அத்து மீறி உள்நுழைந்த இந்திய வான்படை விமானங்கள் யாழ் குடாநாட்டின் மீது உணவுப் பொதிகளை வீசியது. 

* 1989 - சீனாவில் தியனன்மென் சதுக்கத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் ராணுவத்தினரால் நசுக்கப்பட்டது. பல மாணவர்கள், பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 

* 1989 - போலந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் சொலிடாரிட்டி இயக்கத்தின் வெற்றி கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிசத்துக்கு எதிரான புரட்சியைக் கிளறியது.

* 1989 - ரஷ்யாவில் இரண்டு ரெயில்கள் இயற்கை வாயுக்குழாய் ஒன்றைக் கடக்கையில் இடம்பெற்ற விபத்தில் 575 பேர் கொல்லப்பட்டனர். 

* 2001 - அரச மாளிகையில் ஜூன் 1-ல் இடம்பெற்ற படுகொலைகளை அடுத்து கயானேந்திரா நேபாளத்தின் மன்னராக முடி சூடினார்.  



No comments:

Post a Comment