சி.பி.எஸ்.இ., 12வது வகுப்பு பொதுத்தேர்வு ஜூலை 1ல் துவங்குகிறது
சி.பி.எஸ்.இ., 12 வது வகுப்பு பொதுத்தேர்வு வரும் ஜூலை 1ல் துவங்குகிறது மனிதவள மேம்பாட்டு துறை மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பிரச்னையால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கான வகுப்புகள் மற்றும் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. தற்போது, நிலைமை படிப்படியாக சீரடையும் நிலையில், ஜூலையில் தேர்வை நடத்த போவதாக, சி.பி.எஸ்.இ.,யை நிர்வகிக்கும், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர், ரமேஷ் பொக்ரியால், தெரிவித்தார்.
No comments:
Post a Comment