10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம்: அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கொரோனா ஊரடங்கால் தள்ளிவைக்கப்பட்டது. மேலும் நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 4-வது முறையாக மே 31-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஜூன் 1-ந்தேதி முதல் ஜூன் 12-ந்தேதி 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர்.
இதனால் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியுடன் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு குறித்து அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், கொரோனா பரவல் குறையாததால் மாணவர்களின் நலன் கருதி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜூன் 15-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் காலையில் நடைபெறும். பொதுத்தேர்வின் போது ஒரு தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே எழுத அனுமதிக்கப்படுவர்.
மேலும் 11-ம் வகுப்புக்கான விடுபட்ட தேர்வு ஜூன் 16-ந்தேதி நடைபெறும். 12-ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு ஜூன் 18-ந்தேதி நடத்தப்படும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
புதிய தேர்வு அட்டவணை:-
ஜூன் 15-ந்தேதி : மொழிப்பாடம்
ஜூன் 17-ந்தேதி : ஆங்கில பாடம்
ஜூன் 19-ந்தேதி : கணிதம்
ஜூன் 20-ந்தேதி : விருப்ப மொழி
ஜூன் 22-ந்தேதி : அறிவியல்
ஜூன் 24-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 25-ந்தேதி : தொழிற்பாடம்
ஜூன் 17-ந்தேதி : ஆங்கில பாடம்
ஜூன் 19-ந்தேதி : கணிதம்
ஜூன் 20-ந்தேதி : விருப்ப மொழி
ஜூன் 22-ந்தேதி : அறிவியல்
ஜூன் 24-ந்தேதி : சமூக அறிவியல்
ஜூன் 25-ந்தேதி : தொழிற்பாடம்
No comments:
Post a Comment